
தமிழ் சினிமாவின் கதைக்களங்களில் புதுமைமிகு மாற்றங்களை விதைத்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்த நாளையொட்டி அவரது இயக்கத்தில் வெளியான ‘காலா’ படத்தின் காதல் காட்சிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சூழ்ந்திருக்கும் கும்மிருட்டில் மெழுகுவர்த்திக்கு அப்படியே நேர்கோட்டில் அமர்ந்திருப்பார் ஜரீனா (ஹீமா குரேஷி). இருளைக் கவ்வியிருக்கும் வெற்றிடத்தில் நேர்கோட்டில் பரவும் அந்த மஞ்சள் ஒளி ஜரீனாவின் மஞ்சள் நிற சுடிதாரில் பட்டு எதிரொலிக்கும் கணத்தில், குடும்பத்திலிருப்பவர்களை பயமுறுத்தும் பொருட்டு உள்ளே நுழையும் கரிகாலன் (ரஜினி) பயந்து நிற்பார். உண்மையில் பழைய காதலின் மீட்டல் என்பது நம்மை பயமுறுத்தக்கூடியது தானே!
தோற்றுப்போன காதலர்கள் எதிர்கொள்ளும்போது, பிரவாகமெடுத்து பொங்கும் காதலை பின்னணியிலிருந்து தன் மென்குரலால் வருடிக்கொடுத்து அந்தக்காட்சிக்கு அடர்த்தி கூட்டியிருப்பார் பாடகர் பிரதீப். அந்த இருட்டில் ஒளிரும் ஒற்றை மெழுகுவர்த்தியின் ஒளியில் தெரியும் ஜரீனாவின் முகமும், அவரின் அந்த மஞ்சள் சுடிதாரில் பட்டு எதிரொலிக்கும் ஒளி கரிகாலனின் அதிர்ச்சியுறைந்த முகத்திற்கு கொடுக்கும் நினைவின் மீட்டலும், இருவருக்கும் மாறி மாறி வைக்கப்படும் க்ளோசப் ஷாட்டும், ‘கண்ணம்மா…’ ஹம்மிங்கும்…ஒட்டுமொத்த அந்த சில நிமிட காட்சிகளிலும் அழகூட்டி ரசிக்க வைத்திருப்பார் பா.ரஞ்சித்.
பெருமழைக்குப் பின்பும் நிற்காத தூரலைப்போல, தானிழந்த காதலை கண்ட அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்திருக்கும் கரிகாலன், பேச திணறிக்கொண்டிருப்பார். சூழலை உள்வாங்கும் செல்வி (ஈஸ்வரி ராவ்) உடனே சுதாரித்து ‘என்ன சாப்டீறீங்க காஃபியா டீயா?’ என கேட்க முந்திக்கொண்டு ‘காஃபி’ என கூறுவார் கரிகாலன். செல்வியிடம் ஒரு நம்பிக்கை கலந்த பயமிருக்கும். அது செல்விகளுக்கே உரித்தானது.
அது தன் கணவன் மீதான பயமும், இழந்த காதல் மீதான நம்பிக்கையும். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு கரிகாலன் – ஜரீனாவைத் தாண்டி அங்கே மதிக்கப்படுபவர் செல்வி. காரணம் பிரிந்த காதலர்களுக்குத் தேவையான ஸ்பேஸைக் கொடுத்து அவர்கள் உரையாட நேரமமைத்து கொடுத்து, அவர்களின் காதலை மதிக்கும் செல்வியின் அந்த முழு துணிச்சலுக்கும் காரணம் கரிகாலன் மீதான நம்பிக்கை தான்.
அடர் மௌனம் சூழந்திருக்கும் அந்த கணத்தில் கரிகாலனும் – ஜெரீனாவும் பேச வார்த்தைகளற்று தவிக்கும்போது, அங்கே மீண்டும் ‘நா..னா.னனா…’ என பிரதீப்பின் குரல்; இன்னும் ரசிக்க வைத்திருக்கும். இருவருக்குமான உரையாடல் பெரிய அளவிலெல்லாம் இருக்காது. அந்த காட்சிக்கு ஏற்ற மீட்டரில் பதிந்திருப்பார் ரஞ்சித். அங்கே வசனங்களை குறைத்து பிரதீப்பிடம் அந்தக்காட்சியை ஒப்படைத்திருப்பார்.
இருவரும் மாறி மாறி தங்களது காதல் கதையை சொல்லும் காட்சியின் விஷூவல் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை ஒட்டி எழும் ‘கண்ணம்மா’ பாடலில் ‘ஊட்டாத தாயின் கணக்கின்ற மார்ப்போல் என் காதல் கிடக்கின்றதே’ என தேங்கியிருக்கும் காதலின் வலியை தன் அட்டாகாசமான வரிகளில் எழுதி எவர்கிரீன் ஆக்கியிருப்பார் பாடலாசியர் உமா தேவி.
அது தன் கணவன் மீதான பயமும், இழந்த காதல் மீதான நம்பிக்கையும். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு கரிகாலன் – ஜரீனாவைத் தாண்டி அங்கே மதிக்கப்படுபவர் செல்வி. காரணம் பிரிந்த காதலர்களுக்குத் தேவையான ஸ்பேஸைக் கொடுத்து அவர்கள் உரையாட நேரமமைத்து கொடுத்து, அவர்களின் காதலை மதிக்கும் செல்வியின் அந்த முழு துணிச்சலுக்கும் காரணம் கரிகாலன் மீதான நம்பிக்கை தான்.
அடர் மௌனம் சூழந்திருக்கும் அந்த கணத்தில் கரிகாலனும் – ஜெரீனாவும் பேச வார்த்தைகளற்று தவிக்கும்போது, அங்கே மீண்டும் ‘நா..னா.னனா…’ என பிரதீப்பின் குரல்; இன்னும் ரசிக்க வைத்திருக்கும். இருவருக்குமான உரையாடல் பெரிய அளவிலெல்லாம் இருக்காது. அந்த காட்சிக்கு ஏற்ற மீட்டரில் பதிந்திருப்பார் ரஞ்சித். அங்கே வசனங்களை குறைத்து பிரதீப்பிடம் அந்தக்காட்சியை ஒப்படைத்திருப்பார்.
இருவரும் மாறி மாறி தங்களது காதல் கதையை சொல்லும் காட்சியின் விஷூவல் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை ஒட்டி எழும் ‘கண்ணம்மா’ பாடலில் ‘ஊட்டாத தாயின் கணக்கின்ற மார்ப்போல் என் காதல் கிடக்கின்றதே’ என தேங்கியிருக்கும் காதலின் வலியை தன் அட்டாகாசமான வரிகளில் எழுதி எவர்கிரீன் ஆக்கியிருப்பார் பாடலாசியர் உமா தேவி.