ஈரான் தாக்குதல் அதிர்ச்சி: இஸ்ரேலில் நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேலின் டிமோனா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை படம் பிடித்து கொண்டிருந்தபோது அவர்கள் காயமடைந்ததாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

காயமடைந்த நான்கு இலங்கையர்களும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *