
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருந்த அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அஸ்வினை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் அஸ்வினின் கிரிக்கெட் வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டு அவரை வாழ்த்தி இருக்கிறார். அஸ்வின் ஓய்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய வாழ்த்து கடிதம் –
நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் நிலையில் இந்த கடிதம் உங்களை வந்து அடையும் என நம்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நீங்கள் வெளியிட்ட அறிவிப்பு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்னும் பல ஆஃப்-பிரேக்குகளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், நீங்கள் ஒரு கேரம் பந்தை வீசினீர்கள். இருப்பினும், இது உங்களுக்கும் கடினமான முடிவாக இருந்திருக்கும், குறிப்பாக நீங்கள் இந்தியாவுக்காக சிறந்த ஆட்டத்தை ஆடியவர் என்ற அடிப்படையில் உங்கள் முடிவை அனைவரும் புரிந்துகொள்வார்கள்.